Premium WordPress Themes

Monday, 7 March 2011

எம்.வி.சன்.சி தமிழ் அகதிகளுக்கு வழக்கில் வெற்றி

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா சென்றவர்களின் புகலிட அந்தஸ்த்துகோரும் வழக்கில் அவர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வெறுமனே இருந்த தொடர்பு அவர்கள் அதன் உறுப்பினர்கள் என்பதை நிரூபிக்கப் போதுமானதல்ல என்று இந்த விசாரணையை நடத்திய சபை தெரிவித்துள்ளது.

இதனால் தமிழர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்புவது கனடாவின் சமஷ்டி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களுள் சுமார் 30 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் என்று கருதப்பட்டது.

இந்தக் கப்பல் மூலம் சுமார் 490க்கும் அதிகமான இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசித்திருந்தனர்.

0 comments:

Post a Comment